Welcome to official webpage of TNMOA - Tamilnadu Medical Officers Association

[ View all news scrolls ]

TNMOA request Govt not to overload MOs work 3oct 2017




Share via


Updated: March 04 2018 09:49 AM.


🀄🀄🀄🀄🀄🀄🀄🀄🀄🀄🀄

தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்க மாநிலச்செய்தி:

*மருத்துவ அலுவலர்களுக்கு வேலைப்பளுவை குறைத்திடவும், தேவையில்லா அலைச்சல், மன உலைச்சலைகளை தடுத்திடவும் வலியுறுத்தி தமிழக அரசுக்கு கோரிக்கை*

03/10/2017, செவ்வாய்க்கிழமை
காலை 11.00 மணி

தற்போது தமிழ்நாடு முழுக்க, மருத்துவ அலுவலர்களுக்கு *காய்ச்சல் தொடர்பான பயிற்சி வழங்குவது* என்ற பெயரில், தேவையில்லாமல் அலைக்கழிக்கப்படுகின்றனர். ஒருவேளை மாவட்ட| மருத்துவமனைகளிலும், மருத்துவ கல்லூரிகளிலும் ஆள் பற்றாகுறையை சமாளிக்க அவ்வாறு செய்யப்படுமேயானால், *மாவட்ட தலைநகர் அருகேயுள்ள, விருப்பமுள்ள* மருத்துவ அலுவலர்களை மாற்று பணிக்கு அனுப்பினால், *அவசர காலத்தில்* ஏற்றுக்கொள்ளதக்கதாக இருக்கும். ஆனால், மருத்துவ அலுவலர்களுக்கு பயிற்சியளிக்க எந்த ஏற்பாடுமே மாவட்ட மருத்துவ நிலையங்களில் உண்டாக்காமல், மருத்துவ அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது என்பது மருத்துவ அலுவலர்களை ஏமாற்றுவது போல் உள்ளது.

*சுகாதார பணியில் இருக்கும் போதாத மனித வளம்!*

ஒட்டுமொத்தமாக, தமிழ்நாட்டு மக்கள் தொகையில், 80% மக்கள் (அதாவது 6 கோடி மக்கள்) அரசு மருத்துவ நிலையங்களிலேயே சிகிச்சை பெறுகின்றனர். அதில் ஐந்தரை கோடி மக்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையங்களே முக்கியமான சிகிச்சைகளையும், நோய் தடுப்பு யுக்திகளையும் வழங்கி வருகிறது. இத்தனை பெரிய மக்கள் தொகைக்கு சிகிச்சையளிக்க *குறைந்தப்டசம் ஒரு லட்சம் அரசு மருத்துவர்கள் அவசியமென* மனித உரிமைகள் கழகம் டெல்லியிலிருந்து கடந்த ஜூன் மாதத்தில் தமிழக அரசுக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் இருப்பதோ வெறும் 18000 டாக்டர்களே இருக்கிறார்கள். அதிலும், ஐந்தரை கோடி மக்களை பாதுகாக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெறும் 6050 மருத்துவ அலுவலர்களே பணியில் இருக்கிறார்கள். நிலைமை இப்படியிருக்க, பொதுசுகாதாரத் துறையில் நாளுக்கு நாள் மருத்துவ அலுவலர்களின் பணிச் சுமையும், மன உலைச்சலும் அதிகமாகி கொண்டே செல்லும் வகையிலேயே அரசு உயரதிகாரிகள் திட்டம் தீட்டுவது வருந்ததக்கதாவும், கண்டிக்கதக்கதாகவும் உள்ளது. கடந்த 1 வருடத்திற்கு மேலாக பொது சுகாதார துறையில் அதிகளவில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்து வந்தது. அதை நிரப்ப வலியுறுத்தி, கடந்த பிப்ரவரி 3-ஆந் தேதி சென்னையில் இச்சங்கம் போராட்டம் நடத்திய பின்பு, ஒரு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் நியமிக்கப்பட்டனர். அதற்கு பின்பு கடந்த மே மாதத்தில், மருத்துவ அலுவலர்கள் அதிகளவில் உயர் படிப்புக்கு சென்றதால், மீண்டும் சுமார் 1300-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உண்டானது. அதை அரசு உடனடியாக நிரப்ப வேண்டுமென்று போராட்டம் மட்டுமே செய்து கொண்டில்லாமல், அரசுக்கு உதவும் வகையில், நியமன பணியை எளிதாக்கும் வகையில், மதுரை உயர்நீதிமன்றத்தில் இருந்த வழக்கை விரைந்து முடிக்க புதிதாக பணியில் சேர்ந்துள்ள அரசு மருத்துவர்களும், இச்சங்கமும் எடுத்த அனைத்து நடவடிக்கைகளின் விளைவாக, கடந்த செப்டம்பரில் ஏறக்குறைய 1060 மருத்துவ அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் அரசு மருத்துவமனைகளிலும், அரசு மருத்துவ கல்லூரிகளில் இருக்கும் காலிப் பணியிடங்கள் இதுவரை நிரப்பப்படாமல் தாமதப்படுத்தப்பட்டு வருவதும் இதுபோன்ற தேவையில்லா பயிற்சிகளுக்கான காரணமாக இருக்கிறதோ என்ற சந்தேகத்தையும் தருகிறது. இது தவிர களப்பணியாளர்களின் பற்றாகுறையும் மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது.

*பயிற்சிக்கு மேல் பயிற்சி*

ஒரே நேரத்தில், சில மருத்துவ அலுவலர்களுக்கு மாநில தலைநகரில் பயிற்சியும், சில மருத்துவ அலுவலர்களுக்கு மண்டல பயிற்சி மையங்களில் பயிற்சியும், சில மருத்துவ அலுவலர்களுக்கு மாவட்ட தலைமையிடங்களில் EMONC பயிற்சியும், காய்ச்சலுக்கென்றே பிரத்தியேகமான பயிற்சியும் வழங்கப்படுவது ஏற்றுக்கொள்ளவே முடியாத வகையில் உள்ளது. அதாவது, காலிப்பணியிடங்களை நிரப்பியும் மருத்துவ அலுவலர்களின் வேலைப்பளுவில் எந்தவித வேறுபாடும் உணர முடியாத அளவுக்கு, சொல்லப்போனால் இன்னும் அதிகமான மன உலைச்சலை உண்டாக்கும் அளவுக்கு தான் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

*வேலைக்கு மேல் வேலை*

RBSK மருத்துவ அலுவலர்கள், நடமாடும் மருத்துவ அலுவலர்கள் பெரும்பாலும் காய்ச்சல் கட்டுப்பாட்டு பணிக்கு பயன்படுத்தப்படுகின்றனர். ஆனால், "என்ன வேலை பார்த்தீர்கள்" என்று மூன்று மாதம் கழித்து அவர்களிடமே வினா எழுப்பப்படுகிறது. இது அவர்களிடையே துறை மீதான தேவையில்லாத எதிர்மறை எண்ணத்தையும், மன சோர்வையும் உண்டாக்குகிறது. காய்ச்சல் பொது மக்களுக்கு அதிகமாக வரும் போது அதை எவ்வளவோ சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் கட்டுப்படுத்தவே மருத்துவ அலுவலர்கள் முயல்கின்றனர். ஆனால் *தண்ணீர் வறட்சி, வெகு சில இடங்களில் குறிப்பிட்ட நேரங்களில் தண்ணீர் கிடைக்காமையால்* மக்கள் தண்ணீரை சேமித்து வைப்பதால் கொசுப்புழு உற்பத்தியை தடுப்பது இயலாத காரியமாகி விடுகிறது. மேலும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வரும் அத்தனை நோயாளிகளுக்கும் சிகிச்சை வழங்கி விட்டு களப்பணிக்கு செல்ல குறைந்த நேரமே கிடைக்கிறது. அந்த நேரத்திலும், எந்த வாகன வசதியும் இல்லாததால், களப்பணியை தொடர்வதில் சிக்கல் உள்ளது. குறைந்தபட்சம் இரண்டாம் நிலை மருத்துவ அலுவலர்களுக்கு ஒவ்வொருவருக்கும் ஒரு வாகனமும், *வட்டார அளவில் ஒரு வாகனமாவது* இருந்தால் மட்டுமே ஓரளவு சமாளிக்க இயலும்.(மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலுமே வாகனம் இருக்கிறது). இதை சமாளிக்க மருத்துவ அலுவலர்கள் திறனாய்வு கூட்டங்களில் ஆலோசனைகள் கேட்டாலும், மாவட்ட நிர்வாகத்தில் உரிய பதில் கிடைப்பதில்லை. அதற்கு எந்த வகையிலும் சம்மந்தமே இல்லாமல் பயிற்சி மேல் பயிற்சியும், வேலைக்கு மேல் வேலையும் வழங்கப்படுகிறது.

*பாதிக்கப்படும் மருத்துவ அலுவலர் தரப்பிலிருந்து சிந்திக்க வலியுறுத்துகிறோம்*

மருத்துவ அலுவலர்கள் *பயிற்சிகளுக்கு எதிரானவர்கள் அல்ல.* அதே வேளையில், ஏற்கனவே வேலைப்பளுவால் மன அழுத்தத்தில் உள்ள மருத்துவ அலுவலர்களை மேலும் மேலும் வருத்துவதாக வேலைகளை உண்டாக்க கூடாது என்பதே மருத்துவ அலுவலர்களின் கோரிக்கையாக உள்ளது. தமிழ்நாட்டில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் பணி புரியும் ஒரு மருத்துவரின் நிலையை யோசியுங்கள். வேலைப்பளு அதிகம் இருப்பதால், அவரால் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட தன் மனைவியை மருத்துவமனைக்கு கூட அழைத்து செல்ல முடியாமல், ஒரு வாரம் தாமதப்படுத்தியதில் மூன்று முறை வலிப்பு நோயால் அவரது மனைவி பாதிக்கப்பட்டார். மேலும் அவரது எட்டு மாத குழந்தையின் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்ட போதும், அவருக்கு விடுமுறை வழங்க முடியாத அளவுக்கு ஊரில் காய்ச்சல் பாதிப்பு இருந்ததால் ஒரு கட்டத்தில் இதற்கு மேலும் தன் பணியை தொடர வேண்டுமா? என்ற மன நிலைக்கே வந்து விட்டார். பெரும்பாலான மருத்துவர்கள், சேவை மனப்பான்மையிலேயே மருத்துவ படிப்பை தேர்ந்தெடுக்கின்றனர். நவீன கால தினசரி வாழ்க்கையை நடத்துவதற்கேற்ற சம்பளம் கூட அரசால் வழங்கப்படாத போதும் கூட, தான் கற்றதை, படித்ததை எளிய மக்களுக்கு கிடைக்க செய்யவே அரசு பணிக்கு மருத்துவர்கள் வருகின்றனர். அத்தகைய மருத்துவர்களையும், அவர்களின் ஆக்கப்பூர்வமான சிந்தனைகளையும் மனித சமுதாய முன்னேற்றத்திற்காக பயன்படுத்த வேண்டுமெனவும், அதற்கு உயரதிகாரிகள் மருத்துவ அலுவலர்களின் தரப்பிலிருந்து சிந்தித்து பிரச்சனைகளுக்கான தீர்வை கண்டு, அமைதியான பணி சூழலை உண்டாக்க முன்வர வேண்டும் என்பதை அழுத்தமாக இச்சங்கம் பதிவு செய்ய விரும்புகிறது.

நன்றி.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


Share via


Other recent news scrolls: [ View all news scrolls ]

>> feb28 fogda dharna in chennai

Updated: February 22 2021 01:31 PM.

*TNMOA STATE*

*முதுநிலை மருத்துவ மேற்படிப்பில் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி நமது தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் TNMOA உச்சநீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்தி அதன்பலனாக கிடைக்கப்பெற்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்தும்படி தமிழக அரசிடம் கோரியிருந்தோம்.*

*மதிப்பிற்குரிய மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் அவர்கள்*
*Speciality (MD/MS) and superspeciality (MCh/DM) படிப்புகளுக்கு வரும் ஆண்டிலேயே இட ஒதுக்கீட்டை* *நடைமுறைப்படுத்தும்படியான அரசாணையை (G.O 462, 463) ஒரு மாதத்திற்கு முன்பே வெளியிட்டார்கள்.*

*எனினும் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த இந்த அரசாணைகள் மட்டும் போதாதெனவும்,.....

>> tnmoa state news on corona activities and pay hike strike

Updated: April 08 2020 05:48 PM.

🀄🀄🀄🀄🀄🀄🀄🀄🀄🀄🀄

தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்க மாநில அவசரச்செய்தி:

08.04.2020, புதன்கிழமை
இரவு 10.00 மணி


*1. உரிய ஊதியம் கேட்டு போராட்டம் நடத்திய மருத்துவர்களில், 118 பேர் பணிமாற்றம் செய்யப்பட்டனர். பல்வேறு முறை கோரிக்கை வைத்தும், இதுவரை அப்பணிமாற்றங்கள் திரும்ப பெறாமல் இருப்பது மருத்துவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே பணிமாற்றம் செய்யப்பட்ட மருத்துவர்களை மீண்டும் அதே இடத்தில் பணியமர்த்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள இச்சங்கம் வலியுறுத்துகிறது.*

*2. உரிய ஊதிய போராட்டத்தில் கலந்துகொண்ட மருத்துவர்களுக்கு "வேலை செய்யவில்லை என்றால் ஊதியம் இல்லை" என்ற விதியின் அடிப்படையில் ஏழு நாள் ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டு, அது பணி பதிவேட்டிலும் குறிக்கப்பட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கையால் அம்மருத்துவர்களுக்கு முதுநிலை பட்டப்படிப்பில் பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அவர்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு, அந்த ஏழு நாட்களை தற்காலிக விடுப்பாகவோ(Casual leave) அல்லது ஈட்டிய விடுப்பாகவோ (Earned leave) கருதி அதற்கான உரிய ஆணையை வழங்க வேண்டுமென இச்சங்கம் கேட்டுக்கொள்கிறது.*

*3. தற்போது அரசு மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கவசமாக மூன்று லேயர் முகக்கவசம் வழங்கப்படுகிறது. இது எவ்விதத்திலும் பாதுகாப்பை தராதென மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவிக்கன்றனர். எனவே, புறநோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், தாலுகா அளவிலான அரசு மருத்துவமனைகள், கொரோனா தடுப்பு பணியில் களப்பணியாற்றும் மருத்துவர்களுக்கு N95 பாதுகாப்பு கவசத்தை வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு அரசை இச்சங்கம் கேட்டுக்கொள்கிறது. மேலும் சென்னையிலேயே சில மருத்துவ கல்லூரிகளில் N95 முகக்கவசம் தட்டுப்பாடு இருப்பது இச்சங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் இந்நிலையில், ஒவ்வொரு சுகாதார பணியாளர்களின் பாதுகாப்பும் மிகமிக அவசியமானது. எனவே இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள இச்சங்கம் வலியுறுத்துகிறது.*

*4. மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்களுக்கு உரிய ஓய்வும், கொரோனா தொற்றை குறைக்க குறிப்பிட்ட எண்ணிகைகையிலானவர்களை தனிமைப்படுத்தலும் அவசியமாகும். வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு விதமான விதிகள் பின்பற்றப்படுகிறது. ஒரே மாதிரியான விதிகளை பின்பற்ற வேண்டுமென இச்சங்கம் வலியுறுத்துகிறது.*

*5. கொரோனா சிகிச்சை பகுதியில் பணியாற்றுவது, களப்பணி மேற்கொள்வது இரண்டுமே ஆபத்தான பணிகளாகும். அசம்பாவிதங்கள் ஏற்படும் போது மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களை தாக்கும் சம்பவங்கள் ஆங்காங்கு நடைபெற்று வருகிறது. இதை தடுக்க, உரிய பாதுகாப்பு வழங்குமாறு இச்சங்கம் கேட்டுக்கொள்கிறது. கொரோனா தனிமை பிரிவுகளில் கட்டாயம் பாதுகாப்பு தர வேண்டுமென இச்சங்கம் கோருகிறது.*

*6. மருத்துவ குடும்பங்களுக்கும், பிறருக்கும் கொரோனா நோய் பரவுவதை தவிர்க்கும் பொருட்டு, கொரோனா மருத்துவ பிரிவில் பணிபுரியும் மருத்துவர்களுக்கும், பிற பணியாளர்களுக்கும் தங்கும் வசதி, உணவு வசதி உள்ளிட்டவற்றை ஏற்படுத்தித் தருமாறு இச்சங்கம் கேட்டுக்கொள்கிறது.*

*7. கொரோனா வைரஸ் நீர்த்திவளை மூலம் பரவுவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா வைரஸ் சுகாதார பணியாளர்களுக்கு பரவுவதை தடுக்க அனைத்து மருத்துவ உபகரங்களையும் பயன்படுத்திய உடன் சுத்தம் செய்ய போதுமான தூய்மை பணியாளர்களை வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு இச்சங்கம் கேட்டுக்கொள்கிறது.*

நன்றி.

‼️‼️‼️‼️‼️‼️‼️‼️‼️‼️‼️.....

>> 118 MOs appeal to govt on reverting transfer

Updated: April 06 2020 02:50 PM.


.....

>> TNMOA letter to revoke strike transfers and strike period regularisation

Updated: March 28 2020 07:58 PM.




.....

>> Drs and health worker safety in corona duty TNMOA

Updated: March 28 2020 10:21 AM.

🀄🀄🀄🀄🀄🀄🀄🀄🀄🀄🀄

தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்க மாநில செய்தி:

28.03.2020, சனிக்கிழமை
மதியம் 01.30 மணி

*மருத்துவ அலுவலர்கள் மற்றும் பிற சுகாதார பணியாளர்கள் பாதுகாப்பு-தொடர்பாக*

*கொரோனா தொற்றால் உலகமே தற்போது பேரிழப்பை சந்தித்து வருகிறது. இதில் கொரோனா தடுப்புப்பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் மற்றும் பிற சுகாதார பணியாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்கள் வாயிலாக சமூகத்திற்கு பரவும் அபாயமும் உண்டாகியுள்ளது. நேற்றைய தரவுகளின் படி, இத்தாலி நாட்டில் மட்டும் சுமார் 6000-க்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் எனவும், இதில் பெருமளவு மருத்துவ பணியாளர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் நம் நாட்டில் நடைபெறாமல் இருக்க, பின்வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உறுப்பினர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்:*

*1. மருத்துவர்கள் அனைவரும் தத்தம் புற நோயாளிகள் பிரிவில் இரண்டு மீட்டர் இடைவெளியில் (social distancing) நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க வேண்டுமென தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இதை அனைத்து மருத்துவ நிலையங்களிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டுமென உறுப்பினர்களை இச்சங்கம் கேட்டுக்கொள்கிறது. மேலும் புறநோயாளிகள் பகுதியில் குறைந்தபட்ச பாதுகாப்பு உபகரணங்களான முகக்கவசமும், நோயாளியை பரிசோதிக்கும் சூழல் ஏற்பட்டால் கையுறை அணிந்தும் தங்களது பணியை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.*

*2. மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கான பாதுகாப்பு கவசங்கள் குறித்த தெளிவான வழிமுறையை(Protocol) உடனடியாக வழங்கவும், அதற்கேற்றவாறுj பாதுகாப்பு கவசங்களை தடையின்றி கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் அனைவருக்கும் வழங்கவும் உரிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை எடுக்குமாறு தமிழக அரசை இச்சங்கம் கேட்டுக்கொள்கிறது.*

*3. கொரோனா தடுப்பு பணிகளை தடையின்றி மேற்கொள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒவ்வொரு சுகாதார வட்டாரத்திற்கும் ரூ.10 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது. இதுபோல அனைத்து மாவட்டங்களுக்கும் வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறும் இச்சங்கம் கேட்டுக்கொள்கிறது.*

*இதுதொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளை அவ்வபோது உறுப்பினர்களின் கவனத்திற்கு இச்சங்கம் கொண்டுவரும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறது.*

நன்றி.

‼️‼️‼️‼️‼️‼️‼️‼️‼️‼️‼️.....

>> unanath committee recommendations overview 26feb18

Updated: May 04 2018 05:11 AM.

🌸🌸🌸🌸🌸🌸🌸

Tamil nadu Medical PG admissions - incentive mark - Dr. Umanath committee reports. 26.02.2018.

Abstract prepared by
Dr. K. MURUGESAN
909 229 1919

Views expressed are personal, not intended to support or appose any party concerned.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸.....

>> TNMOA tirupathur GBM held 1march18

Updated: May 04 2018 05:11 AM.

🀄🀄🀄🀄🀄🀄🀄🀄🀄🀄🀄

2.3.18

A short GBM was held at
Madhanur CHC today.

50% Service Quota!
What's till now, what next.

Importance of legal & field protest was discussed.




.....

>> TNMOA enquires about invective to govt 28feb18

Updated: May 04 2018 05:11 AM.

🀄🀄🀄🀄🀄🀄🀄🀄🀄🀄🀄

தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்க மாநிலச்செய்தி:

28/02/2018, புதன்கிழமை
மதியம் 01.00 மணி

*முதுநிலை மருத்துவ பட்டபடிப்பில், அரசு மருத்துவர்களுக்கு மேக்ஸிமம் இன்சென்டிவ் மார்க் 15 சதவீதமாக குறைக்க வாய்ப்பு?*

*ஏற்கனவே எம்.சி.ஐ விதியின் படி, வருடத்திற்கு பத்து சதவீதம் வீதம் முப்பது சதவீதம் அதிகபட்ச இன்சென்டிவ் மதிப்பெண் வழங்கப்பட்டது. தற்போது மரு.உமாநாத் IAS கமிட்டியின் பரிந்துரையில் நேரடியாக இன்சென்டிவ் மதிப்பெண்களை குறிப்பிடாமல் சதவீதத்தில் மட்டுமே சூசகமாக தெரிவித்திருப்பது, இன்சென்டிவ் மதிப்பெண்ணை குறைப்பதற்கு வாய்ப்பிருக்கிறதோ என மேன்மேலும் சந்தேகத்தை கூட்டுகிறது. இது தொடர்பாக மத்திய அரசுக்கும் தமிழக அரசு சார்பாக கடிதம் எழுதப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.*

நன்றி.

‼‼‼‼‼‼‼‼‼‼‼.....

>> TNMOA Codemns umanath committee recommendations 27feb18

Updated: May 04 2018 05:11 AM.

🀄🀄🀄🀄🀄🀄🀄🀄🀄🀄🀄

தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்க மாநிலச்செய்தி:

27/02/2018, செவ்வாய்க்கிழமை
காலை 08.30 மணி

*மரு.உமாநாத் IAS கமிட்டியின் பரிந்துரைகளை புறகணிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை!*




*நேற்று(26/02/2018) முதுநிலை மருத்துவ பட்டபடிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு சிறப்பு மதிப்பெண் வழங்குவதற்காக அமைக்கப்பட்ட மரு.உமாநாத் IAS கமிட்டியின் பரிந்துரைகள் வெளியாகியிருந்தது. அக்கமிட்டி பரிந்துரைகளின் வரவேற்கதக்க ஒரே .....

>> TNMOA codemns tiruvannamalai collector 28feb18

Updated: May 04 2018 05:11 AM.

🀄🀄🀄🀄🀄🀄🀄🀄🀄🀄🀄

தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்க திருவண்ணாமலை சுகாதார மாவட்டச்செய்தி:

28/02/2018, புதன்கிழமை
மாலை 07.00 மணி

*கண்டனச்செய்தி😡😡😡*

*போலி மருத்துவர்களை ஒழிப்பதற்கு காவல்துறையினரின் உதவியோடு மாவட்ட சுகாதார இணை இயக்குனர் அவர்கள் தலைமையில் நடைமுறைபடுத்த ஏற்கனவே பல்வேறு வழிமுறைகள் இருப்பினும், இரவு நேரங்களில் நடமாடும் மருத்துவ.....

[ View all news scrolls ]